sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கம்பி திருட்டு: 2 பேர் கைது

/

கம்பி திருட்டு: 2 பேர் கைது

கம்பி திருட்டு: 2 பேர் கைது

கம்பி திருட்டு: 2 பேர் கைது


ADDED : பிப் 06, 2024 05:45 AM

Google News

ADDED : பிப் 06, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே கம்பி திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. கான்ட்ராக்டர். இவர், தரைப்பாலம் கட்டுவதற்காக 800 கிலோ கம்பிகளை வாங்கி வைத்திருந்தார். இந்த கம்பிகள் திருடு போனது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் கடந்த 2ம் தேதி ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி பூட்டை கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக கம்பிகளுடன் வந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில், பாச்சேரி கிராமத்தில் தரைப்பாலம் கட்ட வைத்திருந்த கம்பி எனவும், சங்கராபுரம் பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்காக பாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் ராஜாராம் 30, முத்து மகன் பாண்டியன், 27; ஆகியோர் கொண்டு சென்றதும் தெரிந்தது. உடன் கம்பிகளையும், டிராக்டரையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய பாச்சேரி ராஜேந்திரன் மகன் மகேந்திரன், 25; முத்தாப்பிள்ளை மகன் பாரதிராஜா, 30; ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us