sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எஸ்.பி., அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

/

எஸ்.பி., அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

எஸ்.பி., அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

எஸ்.பி., அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு


ADDED : அக் 09, 2025 02:22 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தாயின் இறுதி சடங்கிற்கு அனுமதிக்காததை கண்டித்து எஸ்.பி., அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை 11:00 மணிக்கு, கையில் பையுடன் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வந்தார். நுழைவு வாயிலில் இருந்த போலீசார், அப்பெண்ணின் பையை சோதனை செய்தனர். அதில் ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் இருந்தது. போலீஸ் விசாரணையில், சின்னசேலம் கடை வீதியைச் சேர்ந்த ராஜவேல் மனைவி அஞ்சலை, 45; என்பதும், காதல் திருமணத்தால் பல ஆண்டுகளாக அவரது பெற்றோர் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமால் இருந்தனர்.

இந்நிலையில் அஞ்சலையின் தாய் பூங்காவனம் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். இதனையறிந்த அஞ்சலை, தனது தாயின் இறுதி சடங்கிற்கு சென்றபோது குடும்பத்தினர், உறவினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அஞ்சலை தாய் இறுதி சடங்கிற்கு அனுமதி அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயற்சிக்கு வந்தது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி போலீசாரை வரவழைத்து அஞ்சலையை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us