/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாக்க மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
/
துாக்க மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
ADDED : நவ 18, 2025 07:31 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உடல் வலிக்காக துாக்க மாத்திரைகளை சாப்பிட்ட பெண் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி ஜான்சிராணி, 42; இவருக்கு சுவாசம், இருதயம் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் இருந்துள்ளது.
இதனால், கடந்த 8ம் தேதியில் இருந்து 11ம் தேதி வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார்.
தொடர்ந்து, கடந்த 15ம் தேதி இரவு உடல் வலி அதிகமாக இருந்ததால் வீட்டிலிருந்த துாக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டுள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் ஜான்சிராணியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்சிராணி இறந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

