ADDED : ஆக 29, 2025 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டி தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, பெயர், கிராம் உள்ளிட்ட முகவரி ஏதும் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
முதியவர் ஆரஞ்சு நிறத்தில் அரைக்கை சட்டை மற்றும் நீல நிற கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார்.
உடலை மீட்ட போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து, இறந்த முதியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.