sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்: போலீஸ் விசாரணை 

/

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்: போலீஸ் விசாரணை 

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்: போலீஸ் விசாரணை 

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்: போலீஸ் விசாரணை 


ADDED : மே 03, 2025 02:07 AM

Google News

ADDED : மே 03, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பிறந்து, பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலய தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த பத்மாவதி,50; என்பவர் சென்றார்.

அப்போது அவரிடம், 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், பிறந்து சில தினங்களே ஆன, ஆண் குழந்தையை சிறிது நேரம் வைத்திருக்குமாறும், கழிவறைக்கு சென்று வருவதாகவும் கூறி, குழந்தையை கொடுத்து விட்டு சென்றார்.

இதையடுத்து, 5 மணி நேரத்திற்கு மேலாகியும் அந்த பெண் குழந்தையை பெற மீண்டும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பத்மாவதி, விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களிடம், குழந்தை விவகாரத்தை கூறினார்.

அவர்கள் அந்த குழந்தையை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில், ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தை கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us