sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதல்வரின் வீடுகள் திட்டம் 133 பேருக்கு பணி ஆணை

/

முதல்வரின் வீடுகள் திட்டம் 133 பேருக்கு பணி ஆணை

முதல்வரின் வீடுகள் திட்டம் 133 பேருக்கு பணி ஆணை

முதல்வரின் வீடுகள் திட்டம் 133 பேருக்கு பணி ஆணை


ADDED : ஜூன் 26, 2025 02:33 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.3.59 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சுமதி முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம் வரவேற்றார்.

ஊரகப்பகுதிகளில் கடந்த 2001ம் ஆண்டுகளுக்கு முன், அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில், தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு புதிய வீடு கட்ட ரூ.2.70 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

அதன்படி, சின்னசேலம் ஒன்றியத்தில், இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 133 பயனாளிகளுக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி பணி ஆணை வழங்கினார்.

அப்போது, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தமிழ்மணி வடமலை, ஊராட்சி தலைவர்கள் கண்ணன், மல்லிகா, அனுசெல்லப்பிள்ளை, மகேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர். பி.டி.ஓ., சவரிராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us