/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
/
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
ADDED : ஜன 04, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே குளத்தில்  மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆரோக்கியம், 30; கூலித் தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் மாலை 4:00  மணியளவில் புகைப்பட்டியில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது  தண்ணீரில் மூழ்கி ஆரோக்கியம் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் ஆரோக்கியம் உடலை மீட்டு  உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்  பதிந்து விசாரித்து வருகின்றனர்.

