ADDED : ஏப் 28, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்::
சின்னசேலம் அருகே வேன் மோதிய விபத்தில் சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.
சின்னசேலம், குறும்பர் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ், 48; சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர், நேற்று மதியம் 12:00 மணியளவில் தனது மொபட்டில் காளசமுத்திரம் கிராமத்திற்கு சென்ட்ரிங் வேலைக்குச் சென்றார். பூண்டி - காளசமுத்திரம் சாலையில் சென்றபோது எதிரே வந்த வேன் ராமதாஸ் மொபெட் மீது மோதியது. இதில், ராமதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.