நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த உலக யானைகள் தின நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் வினோத் மாணவர்களுடன் இணைந்து யானைகளையும், காடுகளையும் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். யானைகளின் வாழ்க்கை, அதன் வழித்தடங்கள், பாரம்பரியம் மற்றும் அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வீடியோ காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.