sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 உலக மரபு வார விழா போட்டி பரிசளிப்பு

/

 உலக மரபு வார விழா போட்டி பரிசளிப்பு

 உலக மரபு வார விழா போட்டி பரிசளிப்பு

 உலக மரபு வார விழா போட்டி பரிசளிப்பு


ADDED : டிச 10, 2025 08:39 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திருக்கோவிலுார் அருங்காட்சியகம் சார்பில், உலக மரபு வார விழா நடந்தது. இதில் திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள், என் பார்வையில் கபிலர் குன்று தலைப்பில் ஓவிய போட்டியும், தொன்மையை பாதுகாப்போம் தலைப்பில் கட்டுரை போட்டியில் பங்கேற்ற னர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியர் அல்லி வரவேற்றார். தொல்லியல் துறை மாவட்ட அலுவலர் சுரேஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவன் தலைவர் உதியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் சூர்யா, காமாட்சி, மஞ்சுளா, புவனேஸ்வரி, இந்திரா உள்ளிட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us