sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 சங்கராபுரத்தில் தொடரும் டிராபிக் ஜாம்

/

 சங்கராபுரத்தில் தொடரும் டிராபிக் ஜாம்

 சங்கராபுரத்தில் தொடரும் டிராபிக் ஜாம்

 சங்கராபுரத்தில் தொடரும் டிராபிக் ஜாம்


ADDED : டிச 10, 2025 08:31 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் தினசரி ஏற்படும் டிராபிக் ஜாமால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறிவருகிறது. சங்கராபுரறாம் சுற்றி உள்ள 40 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு தினசரி சங்கராபுரம் வந்து செல்கின்றனர். இரு சக்கர வாகனத்தில் வரும் அவர்கள் தங்களின் வாகனத்தை சாலையின் இரு புறமும் தாறுமாக நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் சங்கராபுரம் கடை வீதி, பூட்டை ரோடு, கள்ளகுறிச்சி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் தினமும் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்தை சரி செய்ய சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசார் கிடையாது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகி 4 ஆண்டுகள் ஆகியும் சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்டட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சங்கராபுத்திற்கு என தனியாக போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us