/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரமணா பப்ளிக் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா
/
ரமணா பப்ளிக் பள்ளியில் உலக அஞ்சல் தின விழா
ADDED : அக் 12, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; ரமணா பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக அஞ்சல் தின விழா கொண்டாடப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் ரமணா பப்ளிக் சி.பி.எஸ்.இ., மேல்நிலை பள்ளியில் உலக அஞ்சல் தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு கடித போக்குவரத்தின் அவசியம், அதன் துவக்க கால சம்பவங்கள் குறித்து விளக்கி கூறினர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி மகிழ்ந்தனர். பள்ளி முதல்வர் உஷா நன்றி கூறினார்.