/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
/
திருக்கோவிலுார் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
ADDED : ஆக 12, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் சுவாமியின் ஆராதனை விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம், ஹரிவாயுஸ்துதி பாராயணம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து காலை 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், 11:00 மணிக்கு மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஸ்வஸ்தி வாசனம், மங்கள ஆரத்தி நடந்தது. கோவில் நிர்வாகி கோபி மற்றும் விழா குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.