நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலு, 49; விவசாயி. இவரது மகள் நிஷா, 22; ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் 27ம் தேதி நிஷா தனது வீட்டிற்கு வந்தவரை அன்று முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
வேலு கொடுத்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.