sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மூங்கில்துறைப்பட்டில் அதிகரிக்கும் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்

/

மூங்கில்துறைப்பட்டில் அதிகரிக்கும் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்

மூங்கில்துறைப்பட்டில் அதிகரிக்கும் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்

மூங்கில்துறைப்பட்டில் அதிகரிக்கும் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்


ADDED : அக் 14, 2024 09:45 PM

Google News

ADDED : அக் 14, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் மற்றும் சாலையில் பைக்கில் சாகசம் செய்யும் செயலும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

கஞ்சா போதையில் மின் மோட்டார் கேபிள் திருடுவது, குடிநீர் டேங்க் மோட்டார் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சாலையில் செல்பவர்களை அதிச்சியடையச் செய்யும்படி பைக்கில் ரேஸ் ஓட்டி சாகசம் செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கஞ்சா போதையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

மேல்சிறுவலுார் கூட்ரோடு, அருளம்பாடி, வடப்பொன்பரப்பி ஆகிய பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பனையாகிறது. மாவட்ட காவல்துறை கண்காணித்து கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us