ADDED : ஜன 10, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். சந்தப்பேட்டை, காவேரி சந்து அருகே பைக்கில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்துவது தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மணல் கடத்திய சந்தைப்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் அஜித், 25; என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவர் மணல் கடத்த பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.