ADDED : செப் 10, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் ஏழுமலை, 21;. வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.
அதன்பிற்கு வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மதுகுடித்து விட்டு வந்த ஏழுமலையை அவரது தாய் உஷா கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த ஏழுமலை வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
