sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை

/

சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை

சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை

சுத்தமான பாலாற்று குடிநீர் வழங்க கோரிக்கை


ADDED : ஜூலை 13, 2011 11:12 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலாற்று குடிநீர் வழங்க, காஞ்சிபுரம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.காஞ்சிபுரம் மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்கத் தலைவர் மதனகோபால் தலைமையில் நடந்தது.

செயலர் ரவி, பொருளாளர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் போது, பொதுமக்களிடம் கூடுதலாக பணம் வசூலிப்பதைக் கண்டித்தும், நுகர்வோர்களை முன்னறிவிப்பின்றி, ஒரு ஏஜன்சியிலிருந்து மற்றொரு ஏஜன்சிக்கு மாற்றுவதைக் கண்டித்தும், சமையல் சிலிண்டர் சப்ளையில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தெருமுனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.பாதாள சாக்கடை அடைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்; சுத்தமான பாலாற்று குடிநீரை வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் முருகேசன், இணைச் செயலர் தியாகேஸ்வன், துணைச் செயலர் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.



- என்.ஏ.கேசவன் -








      Dinamalar
      Follow us