/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
108 சக்தி பீடத்தில் மஹா பெரியவர் ஜெயந்தி
/
108 சக்தி பீடத்தில் மஹா பெரியவர் ஜெயந்தி
ADDED : மே 24, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் உள்ளது. இங்கு, மஹா பெரியவா ஜெயந்தி மகோத்சவம் நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு, நேற்று காலை 7:40 மணியளவில் கோ- பூஜையுடன் துவங்கியது. பகல் 1:00 மணியளவில் கலசாபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, மஹா பெரியவா மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் 'ஜெய ஜெய சங்கரா... ஹர ஹர சங்கரா' என, கோஷம் எழுப்பி மஹா பெரியவரை வணங்கி சென்றனர்.

