sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாலமுருகன் கோவிலில் 29ல் ஆடி கிருத்திகை விழா

/

பாலமுருகன் கோவிலில் 29ல் ஆடி கிருத்திகை விழா

பாலமுருகன் கோவிலில் 29ல் ஆடி கிருத்திகை விழா

பாலமுருகன் கோவிலில் 29ல் ஆடி கிருத்திகை விழா


ADDED : ஜூலை 26, 2024 12:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் தென்கரையில், ஜெயகணபதி, பாலமுருகன் கோவில் 20ம் ஆண்டு விழா, சரவணபவாநந்த சபாவின், 50ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா, ரதம், பால்காவடி மஹோற்சவம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், மாலை அணிதலும் நடந்தது. தொடர்ந்து கலச பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

நாளை, மாலை 6:00 மணிக்கு ராகவேந்திரா நாட்டியலயா குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு அலங்காரம், மவுனபூஜை, மஹாதீபராதனை நடக்கிறது

வரும் 28ம் தேதி மாலை, சந்தவெளி அம்மன் கோவிலில் இருந்து அலகு தரித்து சக்தி கலசம் ஊர்வலமும், தொடர்ந்து ஜெயகணபதி, பாலமுருகன் கோவிலில் பரணி பூஜை, தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

ஆடி கிருத்திகையான வரும் 29ம் தேதி, அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் அடியார்கள் அலகு தரிக்கும் நிகழ்வு நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு முருகப் பெருமான் தேரில் எழுந்தருளி பவனி வருகிறார். 30ம் தேதி, இடும்பன் பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us