sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்

/

கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்

கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்

கருவிழி பதிவிடும் இயந்திரம் 339 ரேஷன் கடைகளுக்கு வழங்கல்


ADDED : ஜூன் 07, 2024 12:11 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 634 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 414 முழு நேர ரேஷன் கடைகளும், 220 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன.

கடந்த, 2016 ஆகஸ்ட் மாதம் முதல், மின்னணு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு, 2019 அக்டோபர் மாதம் முதல் கைரேகை பதிவு மூலம், இந்த இயந்திரம் செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 46 முழு நேர ரேஷன் கடைகளிலும், குன்றத்துார் தாலுகாவில் 29 கடைகளிலும், பொதுமக்களின் கருவிழி பதிவு செய்யும் முறை சோதனை முறையில் நடைபெற்று வந்தது.

இதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 339 முழு நேர ரேஷன் கடைகளிலும், கருவிழி பதிவு செய்யும் முறை துவங்க உள்ளதை முன்னிட்டு, கருவிழி இயந்திர வசதி பொருத்தப்பட்ட, மின்னணு இயந்திரங்களை, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.

கருவிழி பதிவு செய்யும் முறை மூலம், ரேஷன் கடைகளில் போலி பட்டியல்கள் வாயிலாக உணவு பொருட்கள் வெளி நபர்களுக்கு வழங்குவது தடுக்கப்படுவதோடு, அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us