/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாஜி தலைமையாசிரியர் வீட்டில் 33 சவரன் நகை கொள்ளை
/
மாஜி தலைமையாசிரியர் வீட்டில் 33 சவரன் நகை கொள்ளை
ADDED : ஆக 20, 2024 05:21 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வி.எம். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமாராஜ், 65. இவர் அரசு நிதிஉதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரி யராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு வாணிஸ்வரி, என்ற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி கனகம்மாசத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.
இளைய மகன் தினேஷ் என்பவருக்கு திருமணம் நிச்சயம் செய்து முதல் பத்தி ரிகையை பெண் வீட்டில்கொடுப்பதற்கு குடும்பத்தோடு கடந்த 17-ம் தேதிதிருப்பதிக்கு சென்றார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 33.5 சவரன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணமாராஜ் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

