/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சற்குரு சிவசாமி சித்தருக்கு 35வது குருபூஜை விமரிசை
/
சற்குரு சிவசாமி சித்தருக்கு 35வது குருபூஜை விமரிசை
சற்குரு சிவசாமி சித்தருக்கு 35வது குருபூஜை விமரிசை
சற்குரு சிவசாமி சித்தருக்கு 35வது குருபூஜை விமரிசை
ADDED : மே 04, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர், சற்குரு சிவசாமி சித்தர். இவரது, சமாதி ஆசிரமம், காஞ்சிபுரம் வெள்ளகுளக்கரை மயானம், கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ளது.
சற்குரு சிவசாமி சித்தரின் 35வது ஆண்டு குருபூஜை விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, காலை 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், காலை 11:00 மணிக்கு தேவார இன்னிசையும், சொற்பொழிவும், சிறப்பு பூஜையும் நடந்தது.
காலை 11:30 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 சுவாமிகளின் திருவுருவச்சிலை மலர் அலங்காரத்துடன், காஞ்சிபுரத்தில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தது.