/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
50 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
/
50 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
ADDED : ஆக 31, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மூட்டை மூட்டையாக ஹான்ஸ், விமல், ஸ்வாகத் உள்ளிட்ட 50 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின.
தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் குமார், 45, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து, ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள சிறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.