sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடித்துவிட்டு தினமும் ரகளை கணவனை வெட்டிய மனைவி

/

குடித்துவிட்டு தினமும் ரகளை கணவனை வெட்டிய மனைவி

குடித்துவிட்டு தினமும் ரகளை கணவனை வெட்டிய மனைவி

குடித்துவிட்டு தினமும் ரகளை கணவனை வெட்டிய மனைவி


ADDED : மே 28, 2024 05:04 AM

Google News

ADDED : மே 28, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், : தாழம்பூர், முல்லை நகரை சேர்ந்தவர்கள் வெண்ணிலா, 45, இவரின் கணவர் பாலாஜி, 58. வெண்ணிலா மீன் வியாபாரம் செய்கிறார்.

பாலாஜி, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, கணவன்- - மனைவி இருவருக்கும் இடையே, வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வெண்ணிலா, அவரது கணவரின் இடது பக்க கழுத்தில் கத்தியால் வெட்டினார்.

இதில் காயமடைந்த பாலாஜியை, அருகே இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெண்ணிலா, தாழம்பூர் காவல் நிலையத்திற்கு சென்று, நடந்த சம்பவத்தை கூறினார்.

இது தொடர்பாக, தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us