/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை கொன்ற விவசாயி
/
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை கொன்ற விவசாயி
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை கொன்ற விவசாயி
நெல்லை தின்றதால் ஆத்திரம் 7 பசுக்களை கொன்ற விவசாயி
ADDED : மே 04, 2024 12:11 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில், துலுக்காணம் என்பவரின் ஒன்பது மாடுகள், கடந்த 30ம் தேதி மேய்ச்சலுக்கு சென்றன.
தென்னேரி நெல் கொள்முதல் நிலையம் அருகே, ஏழு பசு மாடுகள் மயங்கி விழுந்து இறந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையில், அரிசியில் விஷம் வைத்து கொன்றிருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், நெல் கொள்முதல் நிலையத்தில், எடை போட வைத்திருந்த நெல்மணிகளை மாடுகள் சாப்பிட்டத்தால், ஆத்திரமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர், வயலுக்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து மாடுகளை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.