sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கார் சாகசத்தில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகரின் மகனுக்கு ரூ.10,000 அபராதம்

/

கார் சாகசத்தில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகரின் மகனுக்கு ரூ.10,000 அபராதம்

கார் சாகசத்தில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகரின் மகனுக்கு ரூ.10,000 அபராதம்

கார் சாகசத்தில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகரின் மகனுக்கு ரூ.10,000 அபராதம்


ADDED : ஆக 07, 2024 02:38 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்,

மீஞ்சூர் - வண்டலுார் இடையேயான வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.

போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கடந்த, 4ம் தேதி, வெளிவட்ட சாலையில் உள்ள கும்மனுார் பகுதியில், தி.மு.க., கொடிகளுடன் ஐந்து கார்கள், வேகமாக பயணிப்பது, புழுதி பறக்க வேகமாக வட்டமடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டன.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார், கார்களின் பதிவு எண்களை கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சோழவரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., துணை செயலர் சுந்தரமூர்த்தி - 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி ஆகியோரின் மகன் நவீன் மற்றும் அவரது நண்பர்கள் அபாயகரமாக கார்களை ஓட்டியது தெரிந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிந்து, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நவீன் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us