/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி
/
போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி
போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி
போனில் பேசியபடி நடந்தவர் கல் குவாரியில் விழுந்து பலி
ADDED : ஆக 01, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 25. தாம்பரம் அருகே எருமையூரில் தங்கி, அதே பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ஜெயராமன், மொபைல் போனில் பேசியபடி, எருமையூர் கல்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது, தவறி விழுந்து 200 அடி நீர் நிரம்பிய குவாரி நீரில் மூழ்கினார்.
இது குறித்து தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், குவாரியில் இறங்கி நான்கு மணி நேரம் தேடி ஜெயராமனை மீட்டனர்.
சோமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.