sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதரில் மறைந்த எச்சரிக்கை பலகை

/

புதரில் மறைந்த எச்சரிக்கை பலகை

புதரில் மறைந்த எச்சரிக்கை பலகை

புதரில் மறைந்த எச்சரிக்கை பலகை


ADDED : ஆக 07, 2024 02:35 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், வண்டலுர் -- வாலாஜாபாத் சாலையில், பனப்பாக்கம் பகுதியில் உள்ள சாலை வளைவில், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைளை மறைத்துள்ள மரக்கிளைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலை வழியே, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

தவிர, ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிப்புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர் உபயோகிக்கும் மிக முக்கிய சாலையாக இந்த சாலை விளங்கி வருகிறது.

இந்த நெடுஞ்சாலையில், ஒரகடம் அடுத்த, பனப்பாக்கத்தில் வளைவு உள்ளது. இந்த வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக எச்சரிகை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளால் எச்சரிக்கை பலகை மறைந்து உள்ளது. இதனால், இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனங்கள் வளைவு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றன.

எனவே, நெடுஞ்சாலை வளைவில் எச்சரிக்கை பலகைகளை மறைத்துள்ள, செடி மற்றும் மரக்கிளைகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us