sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு பள்ளிக்கு ரூ.49 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

/

அரசு பள்ளிக்கு ரூ.49 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

அரசு பள்ளிக்கு ரூ.49 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

அரசு பள்ளிக்கு ரூ.49 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு


ADDED : பிப் 27, 2025 12:32 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ., காலனி பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 255 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில், போதிய வகுப்பறை வசதி இல்லாதால், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ‛மொபிஸ்' தனியார் நிறுனத்தின் வாயிலாக 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூடுதலாக இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, வகுப்பறை கட்டடங்கள் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில், மொபிஸ் இந்திய நிறுவனத்தின் துணை பொது மேளாலர் பாலாஜி முன்னிலை வகித்து, புதிய பள்ளி வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டடங்களை திறந்து வைத்தனர்.

இதில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில், வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் இனியசெல்வி, சி.எஸ்.ஆர்., நிறுவனத்தை சேர்ந்த பாலாஜி, அஜய், சுதிர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us