sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரதாபுரம் கோவில் குளத்தில் பாசி படிந்து தண்ணீர் மாசு

/

வரதாபுரம் கோவில் குளத்தில் பாசி படிந்து தண்ணீர் மாசு

வரதாபுரம் கோவில் குளத்தில் பாசி படிந்து தண்ணீர் மாசு

வரதாபுரம் கோவில் குளத்தில் பாசி படிந்து தண்ணீர் மாசு


ADDED : ஜூன் 25, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத், : வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சி, வரதாபுரத்தில், சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பிலான பொதுக்குளம் உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்குளத்தில் நீராடுவதோடு கோவில் விழா காலங்களில் குளத்தின் நீரை கொண்டு பூஜைகள் செய்கின்றனர்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக இந்த குளத்தின் தண்ணீரில் பாசி படிந்து தண்ணீர் மாசடைந்து பச்சை நிறமாக உள்ளது. இதனால், கோடைக்காலத்தில் இந்த குளத்தில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, வரதாபுரம் சீனிவாச பெருமாள் கோவில் குளத்தில் பாசி படிந்து உள்ளதை அகற்றி பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us