sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரம் பழமையான மரங்கள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

/

சாலையோரம் பழமையான மரங்கள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

சாலையோரம் பழமையான மரங்கள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

சாலையோரம் பழமையான மரங்கள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்


ADDED : மே 07, 2024 11:23 PM

Google News

ADDED : மே 07, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், போளிவாக்கம், காந்திப்பேட்டை, செங்காடு, தொடுகாடு என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார் பேருந்து, கனரக வாகனங்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், இந்த நெடுஞ்சாலையோரம் 500க்கும் மேற்பட்ட புங்கமரம், வேம்பு, அரசமரம், புளிய மரம் என பலவகையான மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன.

இந்த மரங்கள் தற்போது சாயும் நிலையில் உள்ளன. போளிவாக்கம் சத்திரம், காந்திப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் முறிந்து கீழே விழுகின்றன.

சாலையோரம் விழும் மரக்கிளைகளால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் முறிந்து விழுந்த புளிய மரத்தால் மாருதி கார் மற்றும் டியோ பைக் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனவே, நெடுஞ்சாலையோரம் வயதான மரங்களை அகற்றவோ அல்லது சேதமடைந்த கிளைகளை அப்புறப்படுத்தவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us