/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மைய கூரையில் உரசும் மரக்கிளையால் அச்சம்
/
அங்கன்வாடி மைய கூரையில் உரசும் மரக்கிளையால் அச்சம்
அங்கன்வாடி மைய கூரையில் உரசும் மரக்கிளையால் அச்சம்
அங்கன்வாடி மைய கூரையில் உரசும் மரக்கிளையால் அச்சம்
ADDED : செப் 05, 2024 11:16 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி உப்பேரிகுளம் தெருவில், சிமென்ட் கூரை வேயப்பட்ட கட்டடத்தில் கே.வி.கே., பள்ளி அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த கட்டடத்தை ஒட்டி வளர்ந்துள்ள புளிய மரத்தின் கிளைகள் அங்கன்வாடி மையத்தின் சிமென்ட் கூரையின் மீது உரசியபடி படர்ந்துள்ளது.
இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது, மரக்கிளை முறிந்து விழுந்தால், அங்கன்வாடி கட்டடத்தின் கூரை சேதமடைந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், கூரையை ஒட்டி அங்கன்வாடி மைய சர்வீஸ் ஒயர் செல்வதால், மின் ஒயர் துண்டாகி விழுந்தாலும் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, அங்கன்வாடி மைய கூரையில் உரசும் மரத்தின் கிளையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.