sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சி பெற விண்ணப்பம் வரவேற்பு

/

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சி பெற விண்ணப்பம் வரவேற்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சி பெற விண்ணப்பம் வரவேற்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சி பெற விண்ணப்பம் வரவேற்பு


ADDED : மார் 02, 2025 12:28 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டம், 18 -- 35வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, தொழில்வாய்ப்புக்கு தகுதியானவர்களாக உருவாக்கும் திட்டம். குறுகிய கால பயிற்சி வழங்கி, தொழில் சந்தையில் அவர்களை தகுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தரம் வாய்ந்த பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தில் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet / இணையதளம் வாயிலாக, இத்திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், பிரதம மந்திரிபயிற்சி திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம்; முதன்மை தனியார்நிறுவனங்களுடன் இணைந்து வங்கி, நிதிச் சேவைகள், தகவல், மென் பொருள் மேம்பாடு, உற்பத்தி மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில், 12 மாத கட்டணமில்லா பயிற்சியை அரசுவழங்குகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டய படிப்பு மற்றும் பட்ட படிப்பு முடித்த, 21 - 24 வயது வரை உள்ள மாணவ - மாணவியர் இதில் பங்கேற்கலாம்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி, ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம்,உத்திர மேரூர் மீனாட்சியம்மன் தொழில்நுட்ப கல்லுாரி, வாலாஜாபாத் தொழிற்பயிற்சி நிலையம், கீழம்பியில் உள்ள திருமலை தொழில்நுட்ப கல்லுாரி, ஐயங்கார்குளம் பல்லவன் தொழில்நுட்ப கல்லுாரி ஆகிய இடங்களில், மார்ச் 5 - 12 வரை சேர்க்கை முகாம் நடை பெறும்.

இதில், இளைஞர்கள் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us