sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாராட்டு சான்றிதழ் விவகாரம் உயர் அதிகாரிகள் 'அரசியல்'

/

பாராட்டு சான்றிதழ் விவகாரம் உயர் அதிகாரிகள் 'அரசியல்'

பாராட்டு சான்றிதழ் விவகாரம் உயர் அதிகாரிகள் 'அரசியல்'

பாராட்டு சான்றிதழ் விவகாரம் உயர் அதிகாரிகள் 'அரசியல்'


ADDED : ஆக 16, 2024 09:19 PM

Google News

ADDED : ஆக 16, 2024 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக மைதானத்தில், சுதந்திர தின விழா நடந்தது. இதில், கலெக்டர் கலைச்செல்வி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்தோர் என, 520 பேருக்கு, கலெக்டர் கலைச்செல்வி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரசு ஊழியர்களுக்கு, இந்த பாராட்டு சான்றிதழ், அந்தந்த உயரதிகாரிகளால் பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வாறு பரிந்துரை செய்யப்படுவதில், பாரபட்சம் காட்டுவதாக அரசு ஊழியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

சிறப்பாக பணியாற்றினாலும், அதிகாரிகள் ஆதரவு இல்லாததால், பாராட்டு சான்றிதழ் மறுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். கலெக்டரின் பாராட்டு சான்றிதழ் தங்களுக்கு ஊக்கமளிக்கும் எனவும், அதிகாரிகள் அரசியல் செய்வதால், ஊழியர்கள் பலருக்கும் வருத்தம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும், சுதந்திர தின விழாவிலும் வழங்கப்படும் சான்றிதழை பலரும் இரண்டு, மூன்று முறைக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us