sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் வீட்டிற்குள் ‛ரிடர்ன்' ஆகும் கழிவுநீர்

/

காஞ்சியில் வீட்டிற்குள் ‛ரிடர்ன்' ஆகும் கழிவுநீர்

காஞ்சியில் வீட்டிற்குள் ‛ரிடர்ன்' ஆகும் கழிவுநீர்

காஞ்சியில் வீட்டிற்குள் ‛ரிடர்ன்' ஆகும் கழிவுநீர்


ADDED : ஆக 22, 2024 11:53 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம் தெரு, லாலா குட்டை தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவினர் கூறியதாவது:

எங்கள் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரு நாட்களாக வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், இரு நாட்களாக குளிக்காமல் உள்ளோம். இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பாதாள சாக்கடையில் உள்ள கழிவுநீர் வீட்டிற்குள் ‛ரிடர்ன்' ஆவதால், துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. வீட்டு பிரதான வாசலில் கழிவுநீர் தேங்குவதால், இரு வீட்டினர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியில் சென்று விட்டனர். கழிவுநீரால் வீட்டை காலி செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.

இதனால், எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, திருவள்ளுவர் தெரு மற்றும் சுற்றியுள்ள வரதராஜபுரம் தெரு, லாலா குட்டை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே நிலை நீடித்தால், மாநகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன், குடி பெயரும் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us