/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டு எண்ணும் மையம் தேர்தல் அலுவலர் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையம் தேர்தல் அலுவலர் ஆய்வு
ADDED : மே 02, 2024 01:08 AM

செங்கல்பட்டு:குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தரை தளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ளன.
இந்த மையத்தில், ஆறு சட்டசபை தொகுதிக்கான, 12 ஸ்ட்ராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவிபேட்' இயந்திரம் ஆகியவை வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டன.
இதனை, கேமராக்கள்வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இங்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில், வருவாய்த்துறை, எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சிசிடிவி கேமராக்கள் வாயிலாக கண்காணிக்கப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

