/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி இன்று திறப்பு இன்று திறப்பு
/
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி இன்று திறப்பு இன்று திறப்பு
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி இன்று திறப்பு இன்று திறப்பு
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி இன்று திறப்பு இன்று திறப்பு
ADDED : பிப் 25, 2025 02:03 AM

சென்னை மத்திய சென்னை தொகுதி எம்.பி.,யான தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியாக 2 கோடி ரூபாய், ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியாக 1 கோடி ரூபாய்.
தமிழக அரசின் நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில், குத்துச்சண்டை அகாடமி அமைக்கும் பணிகள் நடந்தன. 2,500 சதுரடி பரப்பில் அமைந்துள்ள இதில், ஒரு உடற்பயிற்சி கூடம், இரண்டு பாக்சிங் ரிங், 750 பார்வையாளர்கள் அமரும் மாடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதை, முதல்வர் ஸ்டாலின் இன்று முற்பகல் 11:00 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், அங்கு நடந்த இறுதி கட்டப்பணிகளை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று ஆய்வு செய்தார்.
நிகழ்வில், எம்.எல்.ஏ., எழிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.