sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி பொறியாளர் கைது

/

மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி பொறியாளர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி பொறியாளர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி பொறியாளர் கைது


ADDED : செப் 09, 2024 11:27 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மதுகர், 49. இவர் மணவாளநகர் பகுதியில் கார் 'சர்வீஸ்' சென்டர் நடத்தி வருகிறார்.

சர்வீஸ் சென்டருக்கு 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன், மும்முனை மின் இணைப்பு பெற பெரியகுப்பம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு உதவி பொறியாளர் கஜேந்திரன், 52 என்பவர் மும்முனை 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து மதுகர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் போலீசார் ரசாயனம் தடவிய, 2,500 ரூபாய் நோட்டுகளை மதுகரிடம் கொடுத்து உதவி பொறியாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

நேற்று பெரியகுப்பம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற மதுகர் ரசாயனம் தடவிய நோட்டுகளை, உதவி பொறியாளர் கஜேந்திரனிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கஜேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us