sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பட்டு சேலை கடைகளில் வியாபாரம் சூடுபிடிப்பு

/

பட்டு சேலை கடைகளில் வியாபாரம் சூடுபிடிப்பு

பட்டு சேலை கடைகளில் வியாபாரம் சூடுபிடிப்பு

பட்டு சேலை கடைகளில் வியாபாரம் சூடுபிடிப்பு


ADDED : ஆக 18, 2024 11:50 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரின் பிரதான வியாபாரமான பட்டு சேலை விற்பனை ஆண்டு முழுதும் நன்றாகவே நடைபெறும். தனியார், கூட்டுறவு கடைகள் என, ஆண்டுதோறும் 300 கோடி ரூபாய்க்கு மேலாக பட்டு சேலை விற்பனை நடக்கிறது.

ஆனால், முகூர்த்த நாட்கள் இல்லாத, ஆடி மாதத்தில், வழக்கத்தை காட்டிலும், பட்டு சேலை விற்பனை கணிசமாக குறைவது வழக்கம்.

அந்த வகையில், ஒரு மாதமாகவே, காஞ்சிபுரத்தில் உள்ள கூட்டுறவு கைத்தறி விற்பனை சங்கங்களிலும், தனியார் கடைகளிலும் பட்டு சேலை விற்பனை கணிசமாக குறைந்து காணப்பட்டன. இதனால், வியாபாரிகள் பலரும் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில், ஆடி முடிந்து, ஆவணி மாதம் பிறந்தவுடன், காஞ்சிபுரம் நகர் முழுதும் வெளியூர்வாசிகள் குழுமியுள்ளனர்.

காந்திரோடு, நடுத்தெரு, பிஎஸ்கே தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டு சேலை கடைகளில், வெளியூர் வாடிக்கையாளர்கள் நேற்று குவிந்தனர். இதனால், பட்டு சேலை வியாபாரம் களை கட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us