sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

/

இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 06, 2024 10:07 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி, சதாவரம், ஓரிக்கை பகுதியில் இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் வார நாட்களில், காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது. இங்கு, 12 - 25 வயது வரையிலானள ஆண், பெண் என இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டு.

இசை பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வளாக நேர்காணல் வாயிலாக தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரிய வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது.

மேலும், நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு, இசைப்பள்ளி அலுவலகத்தை, 94425 72948 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us