/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழவேரி பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!
/
பழவேரி பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!
பழவேரி பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!
பழவேரி பள்ளியில் ஆசிரியர் இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!
ADDED : ஜூன் 25, 2024 06:29 AM

உத்திரமேரூர் : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 நாட்களாக ஆசிரியர் யாரும் இல்லாமல் குழந்தைகள் மட்டும் வந்து செல்வதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
பழவேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 குழந்தைகள் பயில்கின்றனர். இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.
இந்நிலையில், சில நாட்களாக தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளார். உதவி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
இதனால், தலைமை ஆசிரியர் விடுப்பு எடுக்கும் நாட்களில், பள்ளியில் ஆசிரியர் யாரும் இல்லாமல் மாணவர்கள் வெறுமனே வகுப்பறையில் இருந்து விட்டு, மாலையில் வீடு திரும்பும் நிலை இருந்து வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, பழவேரி கிராமத்தினர் கூறியதாவது:
பழவேரி தொடக்கப்பள்ளியில், சில நாட்களாக தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளார்.
இதனால், உதவி ஆசிரியரும் இல்லாததால், குழந்தைகள் பள்ளிக்கு வந்து வெறுமனே வகுப்பறையில் இருந்து விட்டு மாலையில் வீடு திரும்பும் நிலை உள்ளது.
ஓரிரு நாட்கள் மட்டும் வேறு பள்ளியில் இருந்து, மாற்று ஆசிரியர் வந்து குழந்தைகளுக்கு வகுப்பெடுத்தனர். எனினும், அவர்கள் மதிய நேரத்தில் வந்து மாலைக்குள் வீடு திரும்புகின்றனர்.
ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் வகுப்பறையில் உள்ளதால், அம்மாதிரியான நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, பழவேரி ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமித்து முறையாக பள்ளி செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழவேரி ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர் வராதது குறித்து முறையாக விசாரிக்கப்படும். தற்போது ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள பள்ளிகளில், விரைவில் ஆசிரியர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.