sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாம்சங் தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தியை நிறுத்த சி.ஐ.டி.யு., மனு

/

சாம்சங் தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தியை நிறுத்த சி.ஐ.டி.யு., மனு

சாம்சங் தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தியை நிறுத்த சி.ஐ.டி.யு., மனு

சாம்சங் தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தியை நிறுத்த சி.ஐ.டி.யு., மனு


ADDED : பிப் 25, 2025 11:44 PM

Google News

ADDED : பிப் 25, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக கூறி, தொழிற்சாலை நிர்வாக இயக்குனரை சந்திக்க அனுமதி கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரை 'சஸ்பெண்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் 20 பேர் என, மொத்தம் 23 பேரை 'சஸ்பெண்ட்' செய்து, சில நாட்களுக்கு முன் கடிதம் வழங்கியது.

இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தொழிற்சாலையில் அனுபவம் இல்லாத பணியாளர்களை கொண்டு, சட்டவிரோத உற்பத்தியை தடுக்க வலியுறுத்தி, பணியாளர்களின் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதுார் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர். பேரணியாக சென்று மனு அளிக்க போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர். பின், முக்கிய நிர்வாகிகள் ஏழு பேரை மட்டும், ஸ்ரீபெரும்புதுார் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையரை சந்திக்க அனுமதி அளித்தனர்.

மூன்று நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை ஆணையர் கடிதம் வழங்கியதை அடுத்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us