ADDED : செப் 05, 2024 06:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏகனாபுரம்;மதுரமங்கலம் அடுத்த ஏகனாபுரம் கிராமத்தில், பரந்துார் விமான நிலையம் அமைவதற்கு, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.
பரந்துார் விமான நிலையத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சை நிலங்கள் எடுக்க, தமிழக தொழில் வளர்ச்சி கழகம் சார்பில், சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இதன் காரணமாக, கடந்த வாரம் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே ஒன்று கூடும் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம், ஏகனாபுரம் கிராமத்தில் இரண்டாம் கட்ட நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியாகியது.
இதை கண்டித்து, வரும் 8ம் தேதி ஏகனாபுரம் கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என, போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.