/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா பல்கலையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
/
சங்கரா பல்கலையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
ADDED : ஆக 29, 2024 09:40 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் குழுமம் சார்பில், சைபர் கிரைம் பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவியல் புல தலைவர் பேராசிரியர் வெங்கட்ரமணன் துவக்கி வைத்தார்.
இதில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சைபர் குற்றங்கள் குறித்து மாணவ- - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ராகிங் தடுப்பு துறை அணி தலைவர் செந்தில்குமார், உறுப்பினர்கள் ரத்ன கேசவன், ரவி ஆகியோர் ராகிங் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் குழுவினர் செய்திருந்தனர்.

