sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரகடம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை சேதம்

/

ஒரகடம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை சேதம்

ஒரகடம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை சேதம்

ஒரகடம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை சேதம்


ADDED : மே 07, 2024 11:28 PM

Google News

ADDED : மே 07, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு செல்லும் பல ஆயிரம் வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. தவிர, ஒரகடம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.

மிக முக்கியமான இந்த சாலையில், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில், முக்கிய சந்திப்புகளில் சாலையின் நடுவே, திசை காட்டும் அறிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் சந்திப்பு அருகே, நிசான் தொழிற்சாலை முன், சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் அறிவிப்பு பலகை சேதமடைந்து பெயர்ந்து உள்ளது.

காற்று வேகமாக வீசும் போது, அறிப்பு பலகை மேலும் பெயர்ந்து, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, சேதமடைந்துள்ள அறிவிப்பு பலகையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us