/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்மாற்றி தாங்கி நிற்கும் கம்பங்கள் சேதம்
/
மின்மாற்றி தாங்கி நிற்கும் கம்பங்கள் சேதம்
ADDED : ஏப் 11, 2024 11:14 PM

தாமல்:காஞ்சிபுரம் அடுத்த, தாமல் கிராம ஏரி நீர்ப்பாசன வயல்வெளியில், இரு மின்மாற்றிகளை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்மாற்றி மூலமாக, விவசாயிகளின் ஆழ்துளை கிணற்று நீர் பாசனத்திற்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில், ஒரு மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், சேதமடைந்துள்ளன. குறிப்பாக, மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால், எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது.
இதனால், மின்மாற்றியில், 'பியூஸ்' போனால், அதை மாற்றுவதற்கு மின்கம்பங்களின் மீது ஏற மின்வாரிய ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை புதிதாக மாற்றித் தர வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

