sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

/

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்


ADDED : மே 07, 2024 04:50 AM

Google News

ADDED : மே 07, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் ஏராளமான சிறிய வகை மீன்களும், 10க்கும் மேற்பட்ட பெரிய வகை மீன்களும் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், அரிசி பொரிகளை மீன்களுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்,சில நாட்களாக காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோடை வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.

இறந்த மீன்களை காக்கைகள் கொத்திச் செல்வதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், குளத்தில் புறா ஒன்றும் இறந்து கிடப்பதால், குளத்து நீர் மாசடையும் சூழல் உள்ளது.

எனவே, குளத்தில் செத்து மிதக்கும் புறாவையும்,மீன்களையும் அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது:

கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் மற்றும் புறாவை அப்புறப்படுத்தவும், மீன்கள் இறக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us