sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கட்டுமான அனுமதி விண்ணப்பத்தில் கழிவு அகற்றுவோர் விபரம் கட்டாயம்

/

கட்டுமான அனுமதி விண்ணப்பத்தில் கழிவு அகற்றுவோர் விபரம் கட்டாயம்

கட்டுமான அனுமதி விண்ணப்பத்தில் கழிவு அகற்றுவோர் விபரம் கட்டாயம்

கட்டுமான அனுமதி விண்ணப்பத்தில் கழிவு அகற்றுவோர் விபரம் கட்டாயம்


ADDED : பிப் 25, 2025 01:52 AM

Google News

ADDED : பிப் 25, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கட்டடங்கள் கட்ட வும், இடிக்கவும் விண்ணப்பிக்கும்போது, கழிவு அகற்றும் பொறுப்பாளர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையை குப்பையில்லா நகராக மாற்றவும், கட்டடக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதை தடுக்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கட்டடக் கழிவை கையாள்வதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கட்டடம் கட்டுவதற்கும், இடிப்பதற்கும் மாநகராட்சியில் அனுமதி பெறும்போது, அதனால் ஏற்படும் கழிவு அகற்றும் பொறுப்பாளர் யார் என்பதையும் குறிப்பிட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநக ராட்சி திடக்கழிவு மேலாண்மை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கட்டடம் கட்டும் வரைப்படத்திற்கு விண்ணப்பிக்கும்போதும், பழைய கட்டடங்களை இடிக்கும்போதும், அதனால் ஏற்படக்கூடிய கழிவை அகற்றக்கூடிய பொறுப்பு நபர் யார், அவரின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

கட்டடக் கழிவு எவ்வளவு உருவாகும் என்று குறிப்பிட வேண்டும். அப்போது தான், 15 நாட்களில் அதற்கான அனுமதி வழங்கப்படும். பணிகள் முடிந்தபின், அதனால் உருவான கழிவுகள் அகற்றப்பட்டது என, மாநகராட்சி சான்று அளிக்கும். அவ்வாறு சான்று பெறாமல், குடிநீர், மின் இணைப்பு பெற முடியாது.

உருவாகும் கட்டடக் கழிவை, ஏழு நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல், மாநகராட்சியே அகற்றி, அபராதத்துடன், அதற்கான செலவு தொகையும் வசூலிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us