/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராகலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை
/
ராகலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை
ADDED : ஆக 20, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ராகலம்மன் கோவிலில், நடப்பாண்டு ஆடி மாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தாண்டு தீமிதி திருவிழாவையொட்டி, கடந்த 16ம் தேதி காப்பு கட்டப்பட்டது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்தீபாராதனை நடந்தது.
மாலை 6:30 மணிக்கு, கோவில் எதிரில் அக்னி குண்டம் அமைத்து, தீமிதி திருவிழா நடந்தது.
இதில், விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.

